நன்றி : கவிதைக்காரன்


கொஞ்சம் முத்தங்கள் போடு!
கனவுகள் ஈரமாகட்டும்!
அஹிம்சைக்கு விடுப்பு கொடுத்ததால்
அடுத்தவாரம் முதல் இம்சைகள்
இசையமைக்கட்டும்...!
வெட்டவெளி ஆனால் என்ன
வேற்று கிரகமானால் என்ன
முட்ட வரும் உன்னை
பற்றியெடுத்து முத்தமிடும்
கணம் ஜயபேரிகை...!
கன்னக்குழிச் சிரிப்பும்
ஈர்க்கும் புன்னகையுமாய்
என்னையே வளைய வரும்
வெண்ணிலவு உன்னை...
நீயும் ஆடைகளில்லா தேகத்தை
அசைத்து இசைத்து
கொதிக்கும் நெஞ்சை கொள்ளையடித்துச்
சிரிக்கிறாய்...நானும்
வெட்கமே இல்லாமல் கொஞ்சிக்கிடக்கிறேன்!
உன் ஈர மேனியோடு விளையாடும்
காலைப்பொழுது எனக்கு அழுப்பதே இல்லை!
உன் மேனி வீசும் அந்த வாசத்தில்
நான் கிரஹித்துச் சுழல்கிறேன்...!
பால்யம் தாண்டாத பச்சிளம் சிட்டுன்னை
தழுவிக்கிடப்பதில் நேரங்காலமேது..!
-மழலை... :)
கனவுகள் ஈரமாகட்டும்!
அஹிம்சைக்கு விடுப்பு கொடுத்ததால்
அடுத்தவாரம் முதல் இம்சைகள்
இசையமைக்கட்டும்...!
வெட்டவெளி ஆனால் என்ன
வேற்று கிரகமானால் என்ன
முட்ட வரும் உன்னை
பற்றியெடுத்து முத்தமிடும்
கணம் ஜயபேரிகை...!
கன்னக்குழிச் சிரிப்பும்
ஈர்க்கும் புன்னகையுமாய்
என்னையே வளைய வரும்
வெண்ணிலவு உன்னை...
நீயும் ஆடைகளில்லா தேகத்தை
அசைத்து இசைத்து
கொதிக்கும் நெஞ்சை கொள்ளையடித்துச்
சிரிக்கிறாய்...நானும்
வெட்கமே இல்லாமல் கொஞ்சிக்கிடக்கிறேன்!
உன் ஈர மேனியோடு விளையாடும்
காலைப்பொழுது எனக்கு அழுப்பதே இல்லை!
உன் மேனி வீசும் அந்த வாசத்தில்
நான் கிரஹித்துச் சுழல்கிறேன்...!
பால்யம் தாண்டாத பச்சிளம் சிட்டுன்னை
தழுவிக்கிடப்பதில் நேரங்காலமேது..!
-மழலை... :)
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.