Disclaimer :

The entire content in this blog is not fully written/authored by me. Most of them are referred from another source which may be in from anyone of the place like Facebook post, other Blog(s), Wiki, Whats-app/email forwards, you tube etc. I have tried my best to mention the respected source links (FB, Blog, wiki, you tube links etc) and also a courtesy tag too. Some of the very old posts may be missing them as they were all published when i started blogging and frankly speaking I wasn't fully aware of the credit methods, copyrights etc. Also my opinion on lot of this published posts eg (god, religion, political views) would have drastically changed now as I believe I have evolved at-least a little over the period of time with my experience and learning.

When I get time I will try to fully review the content. I'm trying this since 2 years (2015) and couldn't even succeed till now. Hope I will in the days to come.

About Me

My photo
My heart will never be free, To push aside the longings I still feel, My eyes will never forget, The fields of patchwork green Soft rain so real, In my dreams I keep searching For those paths I never find........... There're many suspenses,sorrows,surprises stored for the next minute in this world. Meeting you is also one such surprise i hope. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for your future.......!! ALSO I VERY MUCH LIKE, LOVE THESE LINES OF ROBERT FROST...WONDERFULL LINES....... "The woods are lovely, dark, and deep.., But I have promises to keep.., And miles to go before I sleep.., And miles to go before I sleep... !!"

Followers

Visitors

Free counters!
Showing posts with label ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை. Show all posts
Showing posts with label ஞாபகங்கள் நெஞ்சில் நின்றவை. Show all posts

Friday, May 15, 2015

அழகாய் ஒரு அன்-ப்ரெண்ட் (unfriend)


இன்னைக்கு காலைல FB வந்ததும் எனக்கு தெரிஞ்ச விசயங்களே பாத்து எனக்கு தோணினது இது தான்..



















நேத்து வரைக்கும் ப்ரெண்ட்  லிஸ்ட்ல இருந்த ஒரு நபர் இன்னைக்கு திடீர்னு இல்ல, ஆனா இதுலே எனக்கு தெரிஞ்சு ஒரு காரணமும் என்னால் யோசிக்க முடியவில்லை, அதெல்லாம் இனி நான் யோசிக்க போறது இல்லை...  ஒரு வேலை அவங்களுக்கு ஏதும் காரணம் இருக்கலாம்..


இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும், ஏனோ தெரியல, என்னை அறியாமல் என்னில் ஒரு சிறு புன்னகையும் #அன்பே சிவம் படத்தின் இந்த வசனங்களும் நியாபகம் வருது.. அதை எனக்கு தெரிஞ்ச மாதிரி என்னோட விளக்கமும் சேர்த்து இங்கே பதிக்கிறேன்...

குறிப்பு :  எனக்கு தமிழோ, கவிதையோ , தெரிஞ்ச வசனங்களோ கூட மிக சரியாய் எழுத்து / இலக்கண  பிளை இல்லாம எழுத/சொல்ல வராது..  முடிஞ்சவரை சரியாய் எழுத முயற்சி பண்ணிக்கிட்டு  இருக்கேன். அதனால இதை படிக்க நேரும் நபர்கள் இதை கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. நேரமும், மனமும் இருந்தால் பிழைகளை சுட்டிகாட்டுங்கள் , திருத்திகொள்கிறேன்.

முதலில் காரணம் கருதி என்னை பற்றி கொஞ்சம் : 
எனக்கு தாய் மொழி தமிழா இருந்தாலும் ஆரம்ப பள்ளி முதல் பட்ட மேல்படிப்பு, வேலை என்று இன்று வரை ஆங்கில வழி கல்வி மற்றும் அதை சார்ந்தே இருந்தததும்,  என் சுற்றம், சூழ்நிலை, நண்பர்வட்டம்  மற்றும் பல காரணங்களால் என்னால் தாய் தமிழை பாடப்புத்தகம் தவிர்த்து வேறு ஏதும் படிக்கவோ ருசிக்கவோ முடியவில்லை.. பள்ளி மேல்படிபிலும் என் கையெழுத்து நன்றாக இருக்கும் என்ற காரணத்தால் என்னை அடையாளம் கண்டு கொண்ட தமிழ் அய்யாவின் அன்பாலும், தயவாலும் கொஞ்சம் ஊக்கம் கிடைத்தது.  எனக்கு தாய்மொழி வலி சிந்தனை இல்லாமல் ஆனதை எண்ணி பலமுறை மிகவும் வருந்தி இருக்கேன்..  அதற்க்கு முயற்சியும் வழியும் தேடி அலைந்தும் இருக்கிறேன்..  இதனால் கல்லூரியில் பட்ட மேல்படிப்புக்கு எனக்கு தமிழ் / ஆங்கில இலக்கியம் படிக்கவே ஆர்வம், ஆசை இருந்தும், பெற்றோர்கள் மற்றும் மற்றவர்களின் நிர்பந்தத்தில் அது முடியாமல் போனது.  கல்லூரி நாட்களில் (முதல் வருடம் மட்டும்) தமிழ் ஆங்கில இலக்கிய பேராசிரியர்களின் தயவாலும் கொஞ்சம் படிக்கச் நேர்ந்தது.. ஆனால் அது முதல் வருடம் மட்டுமே. பின்னாளில் அது ஏனோ முடியாமல் போனது..  ஆனால் அதற்கு எல்லாம் ஒரு ஆறுதலாய் இருந்தது இந்த முகபுத்தகம் /ப்ளாக்  தான்.                   

இப்போது நான் சொல்ல விரும்புவது :

அன்புள்ள சகமனிதருக்கு,

                    எனக்கு எழுத்து உலக அனுபவம், தமிழ் புலமை எல்லாம் சுத்தமாவோ, இல்ல நீங்க எதிர்பாக்குற அளவுக்கு இல்லாமல் இருந்தாலும்,சில வருஷம் முன்னாடி, இந்த (முகபுத்தகம் /ப்ளாக்) எழுத்து உலகம் எனக்கு சுத்தமா பரிச்சியபடாத  அப்போ , நான் பார்த்த/படிச்சு எழுத்துக்கள் எளிமையா எனக்கு கொஞ்சமாவது புரியுரே மாதிரி எழுதின நெறைய நபர்கள்ள நீங்களும் ஒருத்தர்...  நேர காலம் இல்லாம 24/7 ஆபீசே கதின்னு இருந்த கால கட்டம் அது. வேற எந்த பொழுதுபோக்கும் வடிகாலும் இல்லாம ரொம்ப பைத்தியம் புடிகுரே மாதிரி  ரணமா இருந்தப்ப  முகபுத்தகம் /ப்ளாக் தான் எனக்கு நல்ல உறுதுணையாக இருந்துச்சு.. அதில் நான் படிச்சு ரசிச்ச கவிதைகள் / கதைகள்ல / கட்டுரைகள் எல்லாம் என்னை ரொம்பவே கவர்துச்சு..  அதில் இருந்த பலரின் எழுத்துக்கள்ள உங்களுடையதும் ஒன்னு.. இவை எல்லாம் என்னை ஒரு அளவுக்காவது நல்ல முறையில் பாதிச்சிருக்க வேண்டும்.. அதனால் தான் அதுக்கு பின்னாடி நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகபுத்தகம்  /ப்ளாக்  தான் எனக்கு நல்ல தோழமையா இருந்ததை உணர்ந்தேன்.

இப்படி ஒரு சமயத்தில் சிறு காலமேனும் உங்கள் வலைப்பூவில் முகப்புத்தக பக்கத்தில் எனக்கு தெரிந்ததை கிறுக்க அனுமதி அளித்த உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்... 

உங்கள் "பதிவுகள்" பத்தின என் அனுபவங்களை நெறைய சொல்லலாம், ஆனா குடுத்த காசுக்கும் மேல கூவுரானே'நு ஒரு இளக்காரமான நினைப்பை யாருக்கும் வர வைக்க வேண்டாம்னு சொல்லல.     

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் யார் கிட்டயும் நான் நன்றியும் மன்னிப்பும்  தக்க சமயத்தில்  சொல்லவோ கேட்கவோ  கூச்ச பட்டதே இல்ல. உங்க கிட்டயும் நன்றியும் சரி மன்னிப்பும் சரி ஏற்கனவே நான் எனக்கு தெரிஞ்சு கேட்கனும்னு தேவைப்பட்டபோ, தோனினப்போ கேட்டிருக்கேன்.. இருந்தாலும் இப்போதும் ஒரு முறை சொல்லிகிறேன்..   என்னை அறியாமல் நான் ஏதும் உங்களை புன்படுதீருந்தா என்னை மன்னிச்சிடுங்க.

http://hari1103.blogspot.com/2013/06/i-want-to-say-sorry-thank-you.html

http://hari1103.blogspot.com/2013/06/sorry-and-thank-you.html


எண்ணையும் இவ்வளவு நாள் மதிச்சு ( !! ??) இல்ல பொறுத்துகிட்டு, இப்பவும் அன்-ப்ரெண்ட்  பண்ணினாலும், பிளாக் பண்ணாம, இது வரைக்கும் நான் சொன்னதுக்கு (கேட்ட கேள்விக்கு, கமெண்டுக்கு எல்லாம்) நேரம் ஒதுக்குன உங்களுக்கு ரொம்ப நன்றி..

எளிமையா எனக்கு (மொழி தெரிஞ்ச எல்லாருக்கும்) புரியுரே மாதிரி இருகுங்குரே ஒரே காரணத்துனால..  உங்களோட நெறைய எழுத்துக்கள் பதிவுகள் இப்பவும்  எனக்கு மிகவும் பிடிக்கும். இப்பவும் இனிமேல் எப்பவும். :) 


இனிமேல் உங்க பொழப்ப கெடுக்க (தொல்லை பண்ண)  மாட்டேன். பொழச்சு போங்க ...  :P   ஹ.ஹ.ஹ.. 

அடுத்த விநாடி ஒளிந்துகிடக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்..
உங்களை சந்தித்தது கூட  அப்படிப்பட்ட  ஒரு ஆச்சர்யம் தான்..
ஆச்சர்யங்கள்  நிறைந்த இந்த உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்.. 
 


அன்பு நன்றிகளுடன் 
ஹரி ஷங்கர்.

நீங்களும், இனி நானும் சரி "இதுவும் கடந்து" போய்டே இருக்கே போறோம்..   :)

Tuesday, March 31, 2015

ஸ்பரிசம்


நன்றி  -►   இந்திரா கிறுக்கல்கள் 

Courtesy & Thanks (Source)  :  FB_LinkBlog_Link

ம.வே.சிவகுமார் எழுதிய ‘ஸ்பரிசம்’  சிறுகதை படிக்க நேர்ந்தது. ஒற்றைச் சம்பவத்தைஅடிப்படையாக்க் கொண்ட மிகச்சிறிய கதையெனினும், படித்து முடித்தபின் வெகுநேரமாய்யோசிக்க வைத்தது.

கதையானது.. சிறுவயது முதலே தந்தையால் மிகுந்த கண்டிப்புடன்வளர்க்கப்படும் ஒருவன், தனக்கு பிறந்திருக்கும் குழந்தையைப் பார்க்க ஊருக்குச்செல்கிறான். ரயிலேற்றிவிடும் தகப்பனார் அவன் கைகள் பற்றியபடி இருநூறு ரூபாய் தந்துஅறிவுரைகூறி வழியனுப்புகிறார். அந்த ஒரு சிறு ஸ்பரிசத்தில் தன் பழைய நினைவுகளைப்புரட்டியபடி பயணம் செய்கிறான் அவன். உறவுகளுக்குள் என்னதான் பிணைப்பிருந்தாலும்,ஒரு கட்டத்திற்குமேல் தொட்டு ஸ்பரிசிக்க முடிவதில்லை என்பதை அந்த உள்ளங்கைசூட்டில் உணர்கிறான்.

குழந்தையை முதன்முதலாய்த் தூக்கி உச்சிமுகரும்போது, இன்னும் சிலகாலத்திற்குப்பின் இந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்று யோசித்தவாறேமுத்தமிடுகிறான். அதே நேரம், ஊரில் அம்மாவிடம் அப்பாவும் இதையேசொல்லிக்கொண்டிருப்பதாக கதை முடிகிறது.

கதையம்சம் சாதாரண சம்பவம்தானெனினும் உட்கருத்து என்னவோ மனதைஅழுந்தச்செய்கிற உண்மை.

கடைசியாக என் அப்பாவின் உள்ளங்கை சூடு எப்போது உணர்ந்தேன்?? என்தாயின் உச்சிமுத்தம் எப்போது கிடைக்கப்பெற்றேன்? சகோதரியின் தோள் தட்டிகட்டிப்பிடித்த்து நினைவிலேயே இல்லாமல் போய்விட்டது..

வாழ்வில் ஸ்பரிசம் என்பது மிக முக்கியமானது. ஒரு தொடுகை நிகழ்த்திவிடும்அற்புதம், அலாதியானது. கட்டிப்பிடித்து இதழ் கவ்வுதும், புணர்வதும் மட்டும்ஸ்பரிசமாகாது. காய்ச்சலடிக்கும்போது அக்கறையாய் நெற்றி தொட்டுப்பார்ப்பது கூடஸ்பரிசம் தான். நட்புக்களில் அனிச்சையாய் கரம்பிடித்துப் பேசுதல் கூட சலனமில்லாஸ்பரிசம் தான்..!

குழந்தைப் பருவத்தைக் கடந்தபின் யாருமே எட்டி நின்று நலம்விசாரிப்பதோடு சரி..! அருகமர்ந்து பேசும்போது கைபிடித்து, விரல்கோர்த்துப் பேசும்காதல் உறவில்கூட, குறிப்பிட்ட வயதிற்கு அல்லது காலத்திற்குப்பின் இவ்விடைவெளிதோன்றிவிடக்கூடும்.

ஸ்பரிசம் என்பது தொடுகை மட்டுமல்ல.. நம்பிக்கையும் அக்கறையும்சார்ந்தது..!

நீங்கள் கடைசியாய் எப்போது உங்கள் தந்தையின் கரம் பிடித்துப்பேசுனீர்கள்?






Monday, November 4, 2013

Wonderfull Ride today that i longed since my college days


Had a wonderful trip today. Indeed a very long awaited one and I longed for it so badly since my college days. Started @ 9:00 am to Valparai. Had an amazing ride with my cousin. Wonderful weather throughout. Superb Mist, rainy showers, mild breeze with a light sunshine.. Intermediate stops for tea and sight seeing.... (I know i would miss clicking pics since i do not own a camera but that's ok and planing to get one sometime).. Superb locations all the way. Only i happen to watch my cousins amazing driving skil : Pollachi - பொள்ளாச்சி - Angalakurichi - Aaliyar - Attakatti - Old Valparai - Sholayar - Valparai - Velupillai kudai - Balaji Temple - a short ride towards Akkamalai - Then returned back all the way (adding Aliyar and Zero point) again with the same superb climate with Mist, Cold breeze and what not.. Had an amazing amazing experience.. 

Feeling so happy and heart full of satisfaction.. 

Thursday, August 15, 2013

தேசிய கொடி மலர்கள்

நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன் அதில் வைக்க பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து கை தட்டுகிறோம் ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது அது என்ன தெரியுமா ?????
இந்த கொடி மேலே ஏற அதாவது சுதந்திரம் பெற என்னற்ற தாய் மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது மலர்கள் கீழே விழுந்து அதனை ஞாபக படுத்துகிறது.

Thursday, July 25, 2013

அழகிய நாட்கள்



 
அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்???
 

குழந்தை பருவ நினைவுகள்


குழந்தை பருவத்தை நினைவூட்டும் வினாக்கள்..
இவற்றில் எதையேனும் நீங்கள் செய்ததுண்டா ?

வீட்டில் கிடைக்கும் உடைந்த பொருட்களை எல்லாம் தேடி சொப்பு சாமான் சேர்த்ததுண்டா??

குழம்பு வைக்க மிளகாய்த்தூள் வேண்டுமென செங்கல்லை விரல் தேயத் தேய்த்து செங்காமட்டை அரைத்ததுண்டா??

மண்ணில் கேக் செய்து தோழி பிறந்தநாளை கொண்டடியதுண்டா??

திருவிழாக் கடையில் பலூனுக்காகவும் பஞ்சுமிட்டாய்க்காகவும் அடம் பிடித்ததுண்டா??

நிலவு வந்த நேரத்தில் அப்பாவின் வரவிற்காக காத்திருந்த அம்மாவின் சேலையில் ஒளிந்து கொண்டு அப்பாவின் கைகளையே பார்த்ததுண்டா ??

மழைக் காலத்தில் சிவனேன்னு செடியில் அமர்ந்திருந்த தட்டான (தும்பி) புடிச்சி ஏதோ ஓடி ஓடி பாட்டாம் பூச்சிய புடிச்ச மாறி "ஏய் புடிச்சுடண்டி புடிச்சுடண்டி னு " கத்தியதுண்டா ??

பத்து பைசா அம்மாட்ட வாங்கி பெட்டிக் கடையைத் தேடி தேன் மிட்டாய் தேங்காய் மிட்டாய் குடல் வத்தல் என ருசித்ததுண்டா??

பள்ளிக் கூட வாசலில் இலந்த வத்தல் ,மாங்காய் என வாங்கி நொறுக்கி கொண்டே வீடு போய் சேர்ந்ததுண்டா ??

பள்ளி முடிந்ததும் விளையாடிவிட்டு கால தாமதமாய் வீடு செல்ல , உங்க அம்மா உங்களை வெளுத்து வாங்கியதுண்டா??

டிக் டிக் யாரது ? தேவதை?என்ன வேண்டும்? கலர் வேண்டும் என்ன கலர் ??

பூ பறிக்க வருகிறோம்..பூ பறிக்க வருகிறோம் எந்த பூவை பறிக்கனும் எந்த பூவை பறிக்கனும்?

ஒரு குடம் தண்ணி ஊத்த ஒரு பூ பூத்துச்சாம்.இரண்டு குடம் தண்ணி ஊத்த இரண்டு பூ பூத்துச்சாம்..

இந்த பாட்டுகளை பாடி விளையாடியதுண்டா??

கல்லூரி படிக்கும் அண்ணாவையோ அக்காவையோ பாத்தா "நீங்க பதிமூனாவது தான படிக்கிறிங்கனு கேட்டதுண்டா??

ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய்னு குட்டி சைக்கிள் வாடகைக்கு எடுத்து நீங்களே சைக்கிள் பழகியதுண்டா??

காயம் படாம சைக்கிள் கத்துக்க முடியாதுன்னு சொன்னவன் கிட்ட "அதெல்லாம் நாங்க கத்துபோம்னு " சவுண்ட் விட்டு அடுத்த நாளே விழுந்து வாரியதுண்டா??

கருப்பு வெள்ளை தொலைக் காட்சியை வெறிக்க பாத்து "இதுல எப்படி மனுசங்க தெரியறாங்க,ஒருவேல பெட்டிய உடைச்சு பாத்தா உள்ள இருப்பாங்களோன்னு "விஞ்ஞானி போல் யோசித்ததுண்டா??

காலையில் எழும்பையில் ரேடியோவின் கோபால் பல்பொடி விளம்பரத்துடன் எழுந்ததுண்டா??

அப்பாவின் சட்டை போட்டு பார்த்ததுண்டா??

ஒரே ஒரு மஞ்சைப் பையில் உங்கள் பள்ளிக் கூட புத்தகங்கள் அடங்கியதுண்டா ??

சாமி கும்பிடு னு அம்மா சொன்னா கண்ண மூடர மாறி மூடிட்டு ஒத்த கண்ண தொறந்து எல்லாரும் என்னா பண்றாங்கன்னு நோட்டம் விட்டதுண்டா??

ஞாயிற்று கிழமை மட்டுமே கிடைக்கும் கறி சோற்றிற்காக காத்திருந்ததுண்டா??

வானூர்திக்கு (flight ) டாட்டா காட்டி அதை பறவை போல் ரசித்ததுண்டா ??







பெண்களின் குழந்தை பருவத்தை நினைவூட்டும் வினாக்கள்..

வளையல் ஜோடி சேர்க்கும் விளையாட்டிற்காக உடையாத வளையலையும் உடைத்து வளையல் துண்டுகள் சேர்த்ததுண்டா??
 
அம்மாவின் நெற்றிமேல் இருக்கும் பொட்டை பார்த்து நீ மட்டும் அங்க வச்சிருக்க எனக்கு மட்டும் ஒரு பொட்டு தானா ? என்று வினவியதுண்டா??


சில்லுக் கோடு ,செதுக்கு,நொண்டி, நாடு பிடித்தல், போன்ற விளையாட்டுக்களை குதித்து குதித்து ஆடுகையில் என் கொலுசு சத்தம் போட வேண்டும், இப்பவே கொலுசு போட்டு விடுடி னு அம்மாவை படுத்தியதுண்டா??

நாம் ஆடிய விளையாட்டெல்லாம் போதாதென பசங்க விளையாடும் பச்சை குதிரை, கில்லி,கிர்க்கெட் பக்கம் சென்று "டேய் என்னையும் சேத்துக்குங்க டானு " கேட்டு அவமானபட்டதுண்டா??

கொடியில் காயும் துண்டை எடுத்து தாவணிப் போட்டு கண்ணாடி முன் நின்றதுண்டா ??

அம்மாவிடம் தலை வாருகையில் அடிக்கடி தலையைத் திருப்பி கொட்டு வாங்கியதுண்டா ??


அக்காவ பாரு அவ எப்படி இருக்கா, நீயும் தான் இருக்கியேன்னு அட்வைஸ் வாங்கியதுண்டா??
 
அம்மாவின் பெரம்படியில் இருந்து தப்பிக்க சுற்றலான பாவாடை அணிந்து,விழாத அடிக்கு விழுந்தது போல் நடித்ததுண்டா ??
 .
.
.
.

கடைசியாய் ஒன்று..

பூப்படைந்த ஒரே நாளில் உங்கள் உலகம் பூட்டப் பட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்து(அதற்கு மேல் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருக்கும்) வெறும் பல்லாங்குழியும், கல்லாங்காயும் தாயமும் மட்டும் ஆடியதுண்டா??


-ஆதிரா



Thursday, July 4, 2013

சில்லி விளையாட்டு


மழைக்காலங்களில் சிறுமியர் ஆடுவது. இருவர் சேர்ந்து ஆடுவதால் தலா ஐந்து கட்டங்களை நிலத்தில் வரைந்து உடைந்த மண் பானைத்துண்டுகளை சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீசி ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்தினுள்ளிருக்கும் சில்லியை மிதித்து அதனை அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ளவேண்டும் அது போல் ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர்.இது போல் நான்கு சுற்றுகள் வெற்றிகரமாக முடித்தால் ஒரு பழம் பழுத்ததாகக் கூறி கடைசி நான்காவது கட்டத்தில் ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே இவ்விளையாட்டு ஏற்படுத்துகிறது.
 


சில்லி விளையாட்டு:

மழைக்காலங்களில் சிறுமியர் ஆடுவது. இருவர் சேர்ந்து ஆடுவதால் தலா ஐந்து கட்டங்களை நிலத்தில் வரைந்து உடைந்த மண் பானைத்துண்டுகளை சல்லியாக்கி (இதுதான் சில்லி என்று மாறியிருக்க வேண்டும்) கட்டத்துக்குள் வீசி ஒற்றைக் காலால் நொண்டியடித்தபடி கட்டத்தினுள்ளிருக்கும் சில்லியை மிதித்து அதனை அடுத்த கட்டத்துக்குக் காலால் எத்தித் தள்ளவேண்டும் அது போல் ஒவ்வொரு கட்டத்திலும் வீசி விளையாடுவர்.இது போல் நான்கு சுற்றுகள் வெற்றிகரமாக முடித்தால் ஒரு பழம் பழுத்ததாகக் கூறி கடைசி நான்காவது கட்டத்தில் ஒரு பெருக்கல் குறி வரைந்துகொள்வது வழக்கம். வெற்றிக்கனிகளை முதலில் பெறுபவர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவராகக் கருதப்படுகிறார்.

பயன்கள்: தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகிய பண்புகளைச் சிறுவயதிலேயே இவ்விளையாட்டு ஏற்படுத்துகிறது.

பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள். .


பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கின?!

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்களே ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்.
  
Source : தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture
 

Sunday, June 30, 2013

அம்மாவுக்காக

 
உன்னுள் கருவேற்றி ஈரைந்து மாதங்கள் கருவறையில்சுமந்து உன் கண்ணீருக்கும் என் அழுகைக்கும் இடையேமறுப்பிறப்பெடுத்தவள்…

என் அழுகைக்கு நேரம் அறிந்து காரணம் அறிபவள்…

நான் நடை பழக எனக்கு கால்களாக இருந்தவள்…

நான் விழுந்து அழும் முன்னே கண்களில் நீர்கோர்த்து என் வலி உணர்பவள்…

நான் படிக்கும் வயதில் தூக்கத்தை தொலைத்தவள்…

உள்ளத்தில் வேதைனை பல இருந்தும் நெஞ்சத்தில்வைராக்கியத்தோடு என்னை வளர்த்தவள்…

அதிக வேலையென்றாலும் என்னை தூங்க வைக்க தன்தூக்கம் தொலைத்தவள்… என் உடல்நிலை கோளாறில் தன்னை வருத்திக்கொள்பவள்…

இன்றும்எனக்கு இரண்டாம் உயிராய் வாழ்பவள்…

உன்னை வர்ணிக்கும் அளவு கவிஞன் ஆகிவிட்டேனோ தெரியாது ஆனால் என்னை கவிஞன் ஆக்கி விட்டதும் நீ தான்…

சொல்லியவன் பிழை ஏதும் இல்லாமல் சரியாக சொல்லியிருக்கிறான் மாதா பிதா குரு தெய்வம் என்றுஇதில் உன்னை மறந்திருந்தால் வாக்கிய பிழையாக மாறியிருக்கும்…

கையேந்துபவன் கூட அன்னையின் பாசத்தில் வீழ்ந்தவனாய் அம்மா என்றே அழைக்கிறான்…

உனக்கு ஆஸ்கார் பரிசோ நோபல் பரிசோ வாழ்நாள் தியாகி பட்டம் ஏதும் தேவையில்லை நான் உன்னை தினம் தினம் அழைக்கும் “அம்மா “ என்ற சொல்லைவிட.

Saturday, June 29, 2013

அன்பே சிவம்.


ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான். அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்து கொண்டான்.

காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன் சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான்.அங்கு வயதான பெண்மனி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டே இருந்தார்.

நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான்.அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.ஒரு வேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்றென்னி தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.

அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.

அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள்.இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.

நேரம் ஆக ஆக அம்மா நியாபகம் வந்தது சிறுவனுக்கு அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான்.சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.பாட்டி அவன் செயலை பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்.

சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.’நான் மதியம் கடவுளுடன் சாப்பிடேன்’ என்றான் கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.

அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.’இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள் அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.

அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை, ஆறுதலான வார்த்தை, சின்ன உதவி செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்.

Thursday, June 27, 2013

அயல்நாட்டில் என்னை அசரவைத்தவர்கள்...

நன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?  &   கனா காண்கிறேன்
நம் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் சம்பவங்கள் அனைத்தும் நம் மனதில் பதிந்து விடுவதில்லை. ஒரு சில மனிதர்கள் மட்டுமே பதிவார்கள். அப்படி என்னை அயல்நாட்டில் அசத்தி, என் மனதில் பதிந்தவர்களைத் தான் எழுதியிருக்கிறேன்.

1) சரவணபவனில் மெனு கார்டை பார்க்காமலேயே thaali rice, thosa என்று வேண்டியதைப் பெற்று கையாலேயே சாப்பிடும் வெள்ளையர்கள்.

2) கடைத்தெரு சுற்றி வருகையில் திடீரென வழிமறித்து , நீ இந்தியப் பெண்ணா ??உனக்கு சேலைக் கட்டத் தெரியுமா??எப்படிக் கட்டுவதென்று எனக்குச் சொல்லித் தர முடியுமா ?? என்றுக் கேட்ட வெள்ளைக்காரப் பெண்கள் கூட்டம்.

3) பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த குழந்தையாயிற்றே என்று "salut , tu vas bien??" என்றால் "அக்கா நான் நல்லாத் தமிழ் பேசுவேன்" என்றென்னை செருப்பால் அடித்த என் நண்பரின் குழந்தை.

4) உள்ளூரில் இருக்கும் பெண்களில் பலரும் அயல் நாட்டு மோகத்தில் அலைகையில், அயல் நாட்டின் அன்றாட வாழ்வில் ஊறிப்போன பின்னர் கூட உடையில் கவனமாய் இருந்து , இன்னும் கல்லு வச்ச மூக்குத்தியை மாற்றி வளையமாக்காத எம் குலப் பெண்கள் (ஒரு சிலரே).

5) ஐரோப்பிய வெள்ளை அழகிகள் ஆயிரம் இருக்க, அயல் நாட்டிலேயே வளர்ந்தும் தமிழ் பெண்களையே தேடிப்பிடித்து காதலிக்கும் எம் குல ஆண்கள் (ஒரு சிலரே).

6) உனக்குப் பரத நாட்டியம் ஆடத் தெரியுமா?? என்று என்னைப் பார்த்துக் கேட்ட என் அலுவலக சக ஊழியர். இதில் என்ன அசத்திபுட்டாங்கன்னு கேட்கறிங்களா??. அவர் ஒரு ஆப்பிரிக்கர். தென் ஆப்பிரிக்காவின் மிகவும் பின் தங்கிய குக்கிராமத்திலிருந்து வந்தவர்.
சென்னையை பற்றியும் தமிழ் நாட்டைப் பற்றியும் தமிழ் கலாச்சாரத்தைப் பற்றியும் கேள்வி கேட்டே என்னைக் கொல்லுபவர்.

7) 18 வயதானால் போதும் பெற்றோரைப் பிரிந்துப் பிள்ளைகள் தனியே வாழலாம் எனும் கலாச்சாரத்திலும் பிள்ளைகளை கைக்குள்ளேயே வைத்து வளர்த்து எங்கே செல்கிறாய்?? யாருடன் செல்கிறாய்?? என்று கேள்வி கேட்கும் பெற்றோர்கள்.(பிள்ளைகளை இந்திய முறைப் படி வளர்க்கும் பெற்றோர்களும் ஒரு சிலரே)

8 ) ஐரோப்பாவின் தட்பவெப்ப சூழலிலும் வாழ்கை முறையிலும் நன்றாக பழகிவிட்டாலும் "சொர்க்கமே கண்ணுல காமிச்சாலும் என் சொந்த ஊரப் போல வராது "என்று ஆண்டுக்கொரு முறை ஊரை எட்டிப் பார்த்திட ஏங்கும் உள்ளங்கள்.

9) ஆங்கில வார்த்தைக் கலக்காமல் தமிழில் ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் பேசினால் பரிசு எனும் போட்டி நடத்தும் நிலைமை உள்ளூரில் இருக்க, தமிழை பள்ளியில் கற்க வாய்பில்லாத போதும், தனியே தமிழ் பயின்று இசை முதல் கவிதை போட்டி வரை கலக்கும் மாணவர்கள்.

10) இவைகளையெல்லாம் தாண்டி பாரீஸ் நகரத்தில், நகரின் முக்கியப் பகுதியில் இயங்கும் தமிழ் கடைகளில் பெரிய தமிழ் எழுத்துக்களில் பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள். வரிச்சலுகை வேண்டுமானாலும் தருகிறோம் தமிழில் பெயர் பலகை வையுங்கள் என்று எவரையும் கெஞ்ச வேண்டிய நிலைமை இல்லை.

இதில் இருந்து என்னத் தெரிகிறது என்றால், நாம் யார்? என்று நம்மில் பலருக்குத் தெரியாவிட்டாலும் நம்மவர் இல்லாத பலருக்குத் தெரிந்திருக்கிறது.

அன்புடன்,
ஆதிரா.


Tuesday, June 25, 2013

அன்று - இன்று


நன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?  &   கனா காண்கிறேன்
அன்று இரட்டை ஜடை, பள்ளி சீருடை , சைக்கிள் பயணம் , சாப்பாட்டு கூடை ,வீட்டு பாடம் , ரெகார்ட் நோட் , maths tution, ரேங்க் கார்ட், லீவ் லெட்டெர் , punishment, கோடை விடுமுறை என்றிருந்த எளிமையான உலகம் எத்தனை இனிமையாக இருந்தது.

இன்று லேப்டாப் , ஸ்மார்ட் போன், ஜீன்ஸ் , flight travel, sandwhich , ப்ராஜெக்ட் , presentation , டீம் வொர்க் , மீட்டிங் , deadline , client support ,fb ,browsing ,chatting என்ற உலகம் எத்தனை மொக்கையாக இருக்கு.

# பள்ளிக் காலத்திற்கு ஈடாய் இங்கு எதுவுமே இல்லை.

Tuesday, June 18, 2013

சின்ன வயசுல நான்

நன்றி : களவாணி பய & சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?



1.புஸ் ஆன பட்டாச எடுத்து பேப்பர்லாம் கிழிச்சு அந்த தூள எடுத்து பத்த வச்சு புஸ்ன்னு எரியும் அத பாத்து சந்தோசப்பட்டது

2.வீடுகட்ட கொட்டுன மணல்ல.. பல வீடு கட்டிருக்கேன்

3.மயில் இறகு குட்டி போடும்-னு ஷார்ப்நற் துல தீனியா போட்டு புக்-ல வளர்ப்போம்

4.யாராவது காலை தாண்டி போனா வளர மாட்டேன்னு நினைச்சேன்

5.சைக்கிள் ஓட்டக் கத்துக்கும் போது நான் இடிச்ச பக்கத்து வீட்டு கிழவி ஆறாவது நாள்ல டிக்கெட் வாங்கிடுச்சு

6.பள்ளி மதிய உணவு முடிந்து செல்லும் போது அக்ரஹார வீட்டு calling bell அடித்து எழுப்பி விட்டு ஓடிவிடுவேன்

7.உங்க வீட்டுக்கு பாம்பு வரும் சிலேட்டு குச்சி போடுன்னு பொம்பள புள்ளைகள பயமுறுத்தினேன்

8.டீச்சர் அனைவரையும் சுட்டு விட்டு நாம் மட்டும் இருந்தால் என்னாகும் என்று கேட்டு headmistress வந்து enquiry நடத்தினார்

9.கட்டிப்பிடிச்சி தூங்குனா குழந்தை பிறந்துடும்னு நினைச்சேன்

10.White & white உடையில் தலை விரிகோலத்துடன் புகைக்கு நடுவில் வருவது தான் ஆவி என்று நம்பியது

11.எழுத்தாளர் சுஜாதான்னா ஒரு பொண்ணுன்னு நெனச்சேன்

13.சிலேட்டு குச்சி சாப்பிட்டுருக்கேன்

14.எங்க மாத்ஸ் டீச்சர் வண்டி பஞ்சர் பண்ணது

15.ஈவில் டெட் படத்தப் பாத்துட்டு நைட்டு உச்சா வந்தா கூட பயத்துல எந்திரிக்க மாட்டேன்

16.நீராருங் கடலொடுத்த பாடும் போது கண்ண மூடினே இருப்பேன் தொறந்தா மிஸ் அடிப்பாங்கனு பயம்.

17.பலமுறை வானத்தையே பார்த்துட்டு இருந்தேன் ‘சக்திமான்’ வருவார்னு!

18. பரீட்சை காலையில் மட்டும் திடீர் பக்தி பிரவாகம்

19.exam கு சரியா படிக்கலன்னா இன்னிக்கு CM அல்லது PM போய் சேர்ந்துடனும்னு வேண்டிக்குவேன்!

20.கெட்ட வார்த்தை கேட்டாவே காதை பொத்திக்குவேன்

21.அன்வர் 194 அடிச்சப்ப பொரண்டு பொரண்டு அழுதேன்

22.சச்சின் அவுட் ஆனா அழுவேன் ..

23.தேர்வுக்கு முந்தைய நாள் இரவு சாமி படத்துக்கு முன்னாடி பென்சிலை வைத்து பவர் ஏற்றி எடுத்துச் சென்றிருக்கிறேன்

24.இந்தியா வும் ,பாகிஸ்தான் ஒன்னு சேர்ந்துடணும் , அப்றோம் பாரு டா இந்த ஆஸ்திரேலியாவ எப்புடி அடிப்போம் னு யோசிச்சன்.

25. Aeroplane அ கொஞ்சம் கீழ பறக்க வெச்சா நாம வீடு மொட்ட மாடிலையே எறங்க வேண்டிய வங்கலாம் எறங்கிடலாம்ன்னு நெனச்சேன் ..


26. உடும்பு பிடிச்சா, 7 கழுத கத்தினாதான் விடும்னு நம்பினேன்

27.ஊசிப் போடுற டாக்டரை ஒரு வாட்டி கடிச்சது ..

28.விளம்பரத்துக்காக ஆட்டோவில் தரும் நோட்டீஸை விடாமல் விரட்டிச் சென்று வாங்கியிருக்கிறேன்

29. “தலைவலி” எப்டி இருக்கும்னு தாத்தாகிட்ட கேட்டு அவருக்கே தலைவலி வர வச்சுட்டேன்

# இவ்வளவும் பொறுமையா படிச்சீங்களே, இதுல  நம்பர் பாயின்ட் காணோமே கவனிச்சீங்களா.. அது என்னனு தெரிஞ்சுக்கணுமா..? சரி வேணாம் விடுங்க, எதுக்குங்க பிரச்சன...

Saturday, August 18, 2012

VVS Laxman retirement

VVS Laxman looks to pierce the off-side field, Australia v India, 2nd Test, Sydney, 4th day, January 6, 2012

-------------------------------------------------------

We call him lajjavadhi.. :) I’m not going argue that he should retire on a high note because I respect his decision and There is always life beyond cricket.

I have stopped following cricket and anything related to it for quiet some years.. But still when i came to know about this, those childhood memories of Laxman, Sachin, Saurav, and Dravid playing together flashed for a moment.... He has contributed to cricket with all his efforts. As he said success and failure are part and parcel of life and in cricketer's life too...

Thank you for those Fond memories Laxman. Farewell.. Wish you joy and peace in your journey yet to come...

==============================================================

Courtesy & Thanks : The Hindu
 


A classic flick of the wrists sends the ball racing to the boundary at the Wankhede on November 24, 2011. Photo: K.R. Deepak







V.V.S. Laxman has decided to call it a day. “I announce my retirement from international cricket with immediate effect,” the stylish India batsman informed a crowded gathering at Rajiv Gandhi Stadium in Hyderabad on Saturday. 

In a way, he set a unique trend by quitting the game when he is already in the squad for the Test series against New Zealand starting on August 23 in Hyderabad. “I am not playing in the two-Test series,” he made it clear. 

“I listened to the divine inner voice and to my conscience. I feel it is the right time to move on. And, as one who always put the team’s interests ahead of personal goals, I thought this is the best way to give the youngsters a chance in a home series ahead of the tougher overseas assignments,” 37-year-old Laxman said to a stunned audience. 

“I would have loved to play the tougher series against Australia and England later this season. But, somehow, I found it extremely difficult in the last four days to keep going,” the elegant Hyderabadi said. 

Fabulous journey
 
“It was my dream as a youngster, to represent India. And, I am blessed by the almighty to have played for 16 glorious years of international cricket. I cherish every moment of that fabulous journey,” Laxman said.
“I always read about sportspersons entering a phase when they feel they should call it a day. I thought I have entered that phase, and I will not regret my decision,” he said. “I am very clear in my mind and conscience. There is no way I am going to regret this decision.” 

Laxman also apologised to the family members and well-wishers, who were hoping he would play for one last time in a Test in Hyderabad. “I know my parents, especially, would have loved to see me in action. But, I repeat, that I listened to the divine inner voice and that is it,” he said. 

Referring to his cricketing journey, the veteran of many a battle said it was an honour to play alongside legends like Sachin, Rahul and Ganguly. “I enjoyed every moment of my association with all of them and my captain M.S. Dhoni. I will never forget the bonding and the affection they showed me right through,” he said.
The star India batsman said he informed the national selectors on Saturday morning about his decision to retire. What was their response? “Definitely, they were surprised and did not want me to quit. But, I convinced them, as I did my parents, that I would be happy if I retire,” he said braving a smile. 

“I am grateful to the HCA, BCCI and the national selectors over the years and all those well-wishers for extending their support. I think it is time to express gratitude to all of them and my coaches in domestic and international cricket,” he said. 

Struggling to control his emotions, Laxman reminded that he always gave his best for the Indian team. “I might have disappointed sometimes. But, that was not for want of commitment,” he said. 

Not hasty decision
 
The classy batsman, who made his Test debut in 1996 against South Africa, also asserted that it was not a hasty decision or one taken because of the adverse comments in a section of the media that he is blocking the chances of youngsters. 

“No doubt, it is a very emotional decision. Especially in the last four or five days, I found it really tough when I was debating about retirement. But, I must thank my parents for giving me complete freedom to take the final call,” Laxman said. 

“Definitely, till a few weeks ago, I never thought of quitting at the start of the two-Test series against New Zealand. In fact, I have been training really hard for the last four months. But lately, there has been a serious internal, mental battle which suggested I should end my career,” he said. 

Did the dismal tours of England and Australia last season play a role in his decision? “Definitely, they were huge disappointments. I mean, no Indian cricketer would like to see the team lose so badly. But, then again, you should also remember that we were on top of the world at our best. So, I look at that phase as part and parcel of the sport,” he explained. 

“Yes, I did call up my India teammates including captain M.S. Dhoni, who is very difficult to get on phone (with a smile) and spoke to them. Honestly, I was moved by the abundance of affection they showed. And, all of them were surprised and did not want me to retire,” Laxman said. 

To the delight of the HCA secretary Dr. M.V. Sridhar, president G. Vinod and vice-president N. Shivlal Yadav, Laxman made it clear that he would now chase another dream — to lead Hyderabad to Ranji Trophy victory this season. 

Dr. Sridhar announced that the Northern Stand at the Rajiv Gandhi Stadium will now be named after this “great cricketer”. 

  V.V.S. Laxman and Rahul Dravid during the epic partnership of 376 runs, in India's second innings after following-on, in the second Test against Australia at Kolkata played between March 11 to 15, 2001. India went on to win this Test. Laxman scored 281 while Dravid remained unbeaten on 180.
Photo: V.V. Krishnan
  • The Hindu V.V.S. Laxman and Rahul Dravid during the epic partnership of 376 runs, in India's second innings after following-on, in the second Test against Australia at Kolkata played between March 11 to 15, 2001. India went on to win this Test. Laxman scored 281 while Dravid remained unbeaten on 180. Photo: V.V. Krishnan

Saturday, July 28, 2012

Concord - world's only supersonic airliner.

Courtesy : wikipedia  &  Youtube

Concorde is a retired turbojet-powered supersonic passenger airliner or supersonic transport (SST). It was a product of a Franco-British government treaty, combining the manufacturing efforts of Aérospatiale and the British Aircraft Corporation. First flown in 1969, Concorde entered service in 1976 and continued commercial flights for 27 years.

Among other destinations, Concorde flew regular transatlantic flights from London Heathrow (British Airways) and Paris-Charles de Gaulle Airport (Air France) to New York JFK and Washington Dulles, profitably flying these routes at record speeds, in less than half the time of other airliners.
With only 20 aircraft built, their development represented a substantial economic loss, in addition to which Air France and British Airways (BA) were subsidised by their governments to buy them. As a result of the type’s only crash on 25 July 2000 and other factors, its retirement flight was on 26 November 2003.
Concorde's name reflects the development agreement between the United Kingdom and France. In the UK, any or all of the type—unusual for an aircraft—are known simply as "Concorde", without an article.





Sad to know that this British Pride was not bought back to being part of 2012 London Olympics Opening Ceremony (which was expected as per the news and efforts from some concord fans)

CONCORD is the queen of the skies. Is regarded by many people as an "aviation icon" and an "engineering marvel".
The world's only supersonic passenger airliner.
That plane was a beautiful achievement of mankind in times when, apart from money, ideas where also significant.

It took my breath away to watch it take off. Such dignity man had. We still had the dream. I had the dream. So many of us did. Some like me still do. She was retired only for cost reasons and without other true cause. Every technology and generation has the best of something. Concord. The name said it all.

Its sad that Air France and British Airways couldn't keep at least one in flying condition due to cost reasons.
Now its said that with high cost factors and little chance of renewing her "Certificate of Air Worthiness" it is unlikely that the CONCORDE will ever fly again.

There are + and - everywhere, but still she is the queen of the skies. Miss you angel :(


----------------------------------------------

In total 20 Concordes were built between 1966 and 1979. The first 2 Concordes were prototype models, one built in France and the other in England. Another 2 pre-production prototypes were built to further refine design and test out ground breaking systems before the production runs, of only 16 aircraft in total, commenced in both countries.

The first production aircraft off each production line did not enter service but acted as a test bed for production techniques, airline training and further development work. They also paved the way for the granting of airworthiness certification as well as providing extensive route proving information.

In the end only British Airways and Air France purchased Concordes, with the airlines initially purchasing 5 and 4 aircraft respectively. British Airways acquired the 2 unsold UK built aircraft, while Air France bought the 3 unsold French built craft.

British Airways have a fleet of 7 aircraft while Air France had 5 aircraft. The two prototypes, two pre production and one first production model are now on show in museums on both sides of the channel. The first British production Concorde is now owned by BA and used for spares.

Air France returned 4 aircraft to service after the Paris accident in July 2000, of the others; one was retired for spares use in 1982, one never completed a D check (due to retirement) and the final one was the aircraft lost in the accident.

British Airways operated 5 aircraft, after the accident with a further 2 in storage at London Heathrow, that were not modified post accident.

The AirFrance 4 servicable aircraft were retired to museums in France, Germany and the US.

Since the last commercial Concorde flight on 24 October 2003, the British Airways fleet of seven Concordes have now been retired and have gone to their final resting places at museums around the world.

British Airways chief executive Rod Eddington said, "We have chosen the final homes based a number of criteria: their ability to properly exhibit and preserve the aircraft, their geographical location and accessibility to the public."

The locations are:

· Airbus UK, Filton Bristol, UK
· Manchester Airport, UK
· Museum of Flight, near Edinburgh, UK
· Heathrow Airport, UK
· The Museum of Flight, Seattle, USA
· The Intrepid Sea, Air and Space Museum, New York, USA
· Grantley Adams Airport, Bridgetown, Barbados


---------------------------------------------

For further details please refer to :  http://en.wikipedia.org/wiki/Concorde

Concord Last Flight  

  History, the ONLY CRASH (of the type) & Last Flight











================================================================

Concord Pictures : 


Concorde





 
 

Friday, December 9, 2011

09'Dec : Remembering - 09.12.2006



Wow its 09.12.2011, Remembered this date 5 Years Back in GRD College, Coimbatore. It was a very big crowd of college students from various colleges with lot of hope, dreams and what not ?. Can't forget this date. Finally when myself along with few of my collage mates went back with an IBM Offer our life started changing slowly since then...

It was a nine journey with lot of Friends and memories in the 100 Years BIG BLUE till Date. I'm embarking on a journey with a hope on this surprise springing world. I believe that there are many pleasant surprises in store for our future.......!!