Wednesday, August 14, 2013

தன்மானச்சிங்கம் கோதையம்மாள்


பெயர்: கோதையம்மாள்.

வயது:75 க்கும் மேல்.. . (அவருக்கே சரியாக நினைவில்லை..)

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..
பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..

ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை.. வலுக்கட்டாயமாக  கொடுத்துவிடுகிறார். )

எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..)


ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம். 

அதனாலென்ன தன் மானம் இல்லாதவர்களுக்கெல்லாம் தன்மானச்சிங்கம் என ’பேனர்’ வைக்கும் என் திரு நாட்டில், இவருக்கு பேனர் வைக்க என் பொருளாதாரம் இடம் கொடுக்காதுதான்..அதனால் என்ன... என் முகநூல் பக்கத்தில் மனதார பேனர் வைக்கிறேன்.. நீங்கள் முடிந்தால் ‘share’ செய்யுங்களேன்... 

Thanks : Ramesh Rama.

Source : ரிலாக்ஸ் ப்ளீஸ் (ஆங்கிலத்திலும் Relaxplzz )

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.