Wednesday, August 14, 2013

கம்பீர நடை

வானில் மின்ன வேண்டிய நட்சத்திரங்களை
வீடு-பள்ளிக்கூடம் என்ற சிறிய வட்டத்திற்குள் சிக்க வைத்து விடாதீர்..
நாலு சுவற்றுக்குள் உலகம் முடிந்து விடுவதில்லை
ரத்த பந்தங்கள் மட்டும் தான் நம் சொந்தங்கள் என்பதுமில்லை..
கையை பிடித்து அழைத்து செல்லுங்கள்
தத்தி தத்தி நடை பயிலட்டும்
அதைக் கண்டு நீங்கள் திணறி விடாதீர்..

ஒரு நாள் மீண்டும் அவர்களின் கையை பிடிப்பீர்கள்
ஆனால் அப்போது வழிநடத்தப்படுவது
நீங்கள் மட்டுமல்ல
உங்கள் பிள்ளைக்கு நீங்கள் அறிமுகப்படுத்திவைத்த இச்சமூகமும்..

தயாராகுங்கள் உங்கள் பிள்ளையின்
கம்பீர நடையைக் காண..!!!!

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.