Sunday, August 11, 2013

நேசிக்க


யாரும் யாரையும் நேசிக்கலாம்
யார் யார் யாரை நேசிக்கிறார்கள்
என்பது தனி

நீயும் நானும் நேசிக்கிறோம் என்பது பொது
நீ யாரை
நான் யாரை
என்பது தனி

நீயும் நானும் நேசிக்கவில்லை
என்பதான உன் உறுதி தனி

நான் நேசிப்பது உன்னை மட்டுமே
என்பதான என் உறுதி தனி

இப்போதென்ன
நம்மில் யாராவது வாழ்ந்து விட்டுப்
போகிறோம்
நேசிப்பின் பொருட்டு

அவமானத்தின் வலி
மட்டுமே பொது
தோழி(ன்)
நிராகரிக்கப்பட்டு விலகி நிற்கும் எவருக்கும்

ஆமென்.

-குமரகுருபரன்.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.