Sunday, May 6, 2012

தன்னம்பிக்கை.

நன்றி :  : Nagoorkani Kader Mohideen Basha 
 
யானையின் பலம் அதனுடைய தும்பிக்கையிலே!
மனிதனுடைய பலமே அவனின் மீதான நம்பிக்கை. ஆம் அதற்கான பெயர் தன்னம்பிக்கை.

கணவன் தன மனைவி மீது நம்பிக்கை . மனைவிக்கு கணவன் மீது நம்பிக்கை. இவர்களை பிணைப்பது இருவரிடமும் உள்ள தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கை இல்லாதவன் ஒரு உயிரற்ற ஜடத்திற்கு ஒப்பாகின்றான். அவனின் மீது கொண்ட நம்பிக்கை பொய்த்துப் போகின்றது.

ஒரு மாணவன் தன்னால் முடியும் என்ற நம்பிக்கை கொள்ளும்போது, அவனால் நன்றாக படிக்க இயலுகின்றது. நல்ல மார்க்கும், உயர்நிலை படிக்கத் தேவையாக தகுதி உடையவனாகவும் முடிகின்றது.
இந்த தன்னம்பிக்கை எப்படி சாத்தியம் ஆகின்றது......?

உடல் பலம் உள்ளவனால், எதனையும் தூக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.

பலம் அற்றவனால் எதனையும் செய்ய இயலாதவனாக பார்க்கப் படுகின்றது.

ஆக, மூளை பலம், உடல் பலம் இருந்தால் தான் தன் மீதான நம்பிக்கைப் பிறக்கின்றது.

இவற்றிக்கு எப்படி இந்த பலம் வந்தது?

ஒருவன் இயற்கையான ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் ஆகின்றது.

உடலின் மீதான அக்கறை கொண்டு ஆரோக்கியத்திர்க்கான வழிமுறைகளை கடைபிடிப்பவன், உடல் பலம் பெறுகின்றான்.

ஒருவனின் நுரையீரலின் சக்தியும், இதயத்தின் சக்தியும் நன்றாக இருக்கும்போது அவனுக்கு இயற்கையாகவே, நம்பிக்கையும், துணிச்சலும் இருக்கும்.

சிந்தை சிதறாமல் சிந்தனை செய்து அதனை வளப்படுத்தும் ஒருவனால் மனபலமும் மூளை பலமும் ஏற்படுகின்றது.
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.