Monday, March 5, 2012

வேறொன்றும் அறிகிலேன்

பகிர்வுக்கு நன்றி : தழல் திருவண்ணாமலை

வேறொன்றும் அறிகிலேன் நான்
சாட்சியாய் நிற்பதை தவிர

கனவுகளில் மட்டும் இன்றும் உண்டு
புரவியேறி போர் புரிந்ததும்
மன்னனுக்காய் சிரமறுத்ததும்

எனது பூமி சிதைக்க படுகிறது
காடுகள் சூறையாடப்படுகின்றன
உணவு ,பண்பாடு, கலைகள் ,
அடையாளம் அனைத்தும்
அழித்து ஒழிக்கபடுகின்றன

விழிகளிலிருந்து வழிகிறது நீர்
துடைக்க மனமில்லாமல்
கையாலாகத்தனத்தின் உச்சமாய்

வேறொன்றும் அறிகிலேன்
நான் சாட்சியாய் நிற்பதை தவிர

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.