Sunday, July 17, 2011

பூவே பூச்சூடவா



பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா ..
வாசல் பார்த்து கண்கள் பூத்து பார்த்து நின்றேன் வா ...
(பூவே )

அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என்வாசல் தீண்டவேயில்லை ..கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் .
கண்களும் ஓய்ந்தது .. ஜீவனும் தேய்ந்தது ..
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

(பூவே )

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் குறையாது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரிந்தாலும் தங்கம் கருக்காது தாயே
பொன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் ..
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டு ..சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் ,,நான் உன் மகளாக வேண்டும் .
பாச ராகங்கள் பாட வேண்டும் ..

(பூவே )


SONG - VERSION 2

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.