Friday, December 4, 2015

மனிதனும் இயற்கையும் மனிதமும்

இன்றைய தேதிக்கு சென்னையிலும் கடலூரிலும் இன்னும் எண்ணற்ற இடங்களில் இயற்கையின் சீற்றமும் அதனால் மக்களின் வாழ்க்கை நிலையம் கண்கூடாக பார்க்கிறோம்.

இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் வெறுமனே வருத்த பட்டு என்ன பயன், ஒன்றும் இல்லை...

இயற்கையாகவே மனிதனுக்குள் மனிதம் இருக்குமா என்பது தெரியாது, ஆனால் வளரும் சூழல் அதை தீர்மானிக்கும் என்றே நினைக்கிறேன்..
இந்த இயற்கை சீற்றத்தில் பாதிக்க பட்டோரை நினைத்து வருத்தமே..ஆயினும் இதனால் மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி என்று எவ்வளவோ பிரிவினையிலும், இயந்திர மற்றும் இயற்கைக்கு எதிரான முரணான வாழ்கையும், ஆசைகளும் இப்படி எண்ணற்ற காரணங்களால் பிரிந்து திரிந்த மக்களுக்கு இப்போதைய இயற்கை சீற்றம் சொல்லி வைத்த பாடம் இதுதான் "மனிதமும் இயற்கையும் அடிப்படையாக அரவணைத்து கொண்ட வாழ்க்கை தான் நிலையானது , நிம்மதியானது , அதுவே நம் அனைவரின் நெஞ்சார்ந்த விருப்பமும், ஆனால் ஏதோ காரணங்களால் தெரிந்தே இதெல்லாம் மறந்து ஓட / வாழ பழகிவிட்டோம்.. இப்போது பாருங்கள் "மதம், இனம், ஜாதி, செல்வம், கட்சி " என்று எந்த பாகுபாடில்லாமல், அனேகமாக அணைத்து அல்லது பெரும்பாலான மக்கள் உதவுவதும், உறுதுணையாக இருபதும்.. நம் சுயரூபம் ஒருவேளை இது தானோ ?? ஒரு வேலை இருக்கலாம் .. !!

இப்பொழுது
நம் அனைவரும்
- யார் எவ்வளவு உதவி செய்தார்கள், செய்யவில்லை, ஏன்
- யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் , கொடுக்கவில்லை, ஏன்
- இது யாருடைய குற்றம்,
என்றெல்லாம் இப்போது விவாதிச்சு - பகிர்ந்து பெரிதாக என்ன ஆகிவிட போகிறது.??  ஆகையால்
- உங்கள் நன்றிகளையும், வருத்தங்களையும், பெருமைகளையும் நிச்சயம் பிறகு ஒரு நாள் பதிவு செய்யலாம்.

இன்றைய உடனடி தேவை : மனித நேயத்தோடு.... .... ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் இந்த இடரினைக் கடக்க வேண்டும் என்பதே!

இனி நாளைய விடியல் என்பது : இனிமேலாவது "மனிதமும் , இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதும் - அல்லது குறைந்தபட்சம் முரணாக - எதிராக வாழ்வதை தவிர்ப்பது. ". -- இன்றைய இந்த துன்ப கணங்கள் நமக்கு மறுபடியும் ஞாபக படுத்திவிட்டு சென்றுள்ளது இது ஒன்றே ஒன்று தான் ...

இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு செழிக்கட்டும்.
மனிதம் மலரட்டும் .

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.