Friday, August 9, 2013

திரும்பிப் போகும் போது

Source :  கார்த்திக் புகழேந்தி

கடலோடு... விளையாடி...
காற்றோடுகைவீசி....
இல்லாத ஊர்போய்...
சொல்லாத துயர் தீர்க்கிறேன்...

சிதைந்த பூமியில்
தொலைந்த உயிர் தேடவோ...
இல்லை புதைந்த பொருள் நாடவோ...

அலைகடலோ ஆர்ப்பரிக்க...
ஆணின் மனம் நழுவிடுமோ...
என் ஊமைக்குரல் அழுதிடுமோ...

போகும் வரை போகட்டுமே...என் சோகம்
இந்நீலக்கடல் மூழ்கட்டுமே..

திரும்பிப் போகும் போது..
துப்புரவாய் துடைத்த மனம்... கட்டவிழ்ந்து ஆடட்டுமே...

-கவிதைக்காரன்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.