Thursday, August 1, 2013

காகிதப் பூ


ஆத்தாவின் சேலையில் தொட்டில் கட்டி
அவள் தாலாட்டில் தரணி மயங்கி நான்
தூங்கியதில்லை..

தாத்தாவின் கை பிடித்து தத்தி தத்தி
நான் பெட்டிக்கடைச் சென்றதில்லை..

தாய் மாமன் வெளியே செல்ல என்னை
வண்டியில் வைத்து சுற்றி வந்து விட வேண்டும்
என்று நான் அடம் பிடித்ததில்லை...

அத்தை உணவு உண்ண அவள் மடியில் அமர்ந்து
எனக்கொரு வாய் என்று நான் கேட்டதில்லை...

தாத்தா நட்ட ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி
அப்பா என்னை அதில் வைத்து ஆட்டியதில்லை..

அக்கம் பக்கமெல்லாம் குழந்தைகளாய் இருக்க
ஆசைத் தீர நான் ஆடிப் பாடியதில்லை..

அத்தனை சொந்தங்களும் ஊரில் இருக்க
அம்மாவும் அப்பாவும் அலுவலகம் செல்ல
அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கறையின்றி
baby-sitting முறையில் வளர்க்கப்படும்
காகிதப் பூ நான்..

-ஆதிரா


No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.