Wednesday, July 3, 2013

நேற்றொருவன்

பகிர்வுக்கு நன்றி: குழந்தைநிலா ஹேமா
 நேற்றொருவன்
என்னை
உடைக்கத்தொடங்கியிருந்தான்
மொழியற்ற
உளறல் தேசத்துள்
நானற்று
நினைவிழந்திருந்தேன்.

மொழி மந்திரமாய்
புரியத்தொடங்கியது
வீணையின் இதமென்றான்
மெல்ல முறுவலித்து
நீ....
மல்லிகையின் இனமடியென
இடையொடித்து
பின் ஒட்டிக் களிம்பிட்டு
என்னை எரித்துவிட்டு
தானே....
புகைந்துகொண்டிருந்தான்
பெரும் சேவகமென
என் விசும்பல்களுக்கும்
கேவல்களுக்கும்
ஏதேதோ பெயரிட்டபடி!!!
 

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.