Monday, July 8, 2013

சாந்தியும், சமாதானமும்

ரெண்டு மூணு நாளா மனசே சரியில்லை.

ஒரு நல்ல மனிதரைப் பார்த்து அறிவுரை கேக்கலாம்னு தோணிச்சி.

அப்பதான் அவரோட நினைவு எனக்கு வந்துச்சி. எங்க ஊர்ல ஒரு யோகி இருக்கார். எப்போ பார்த்தாலும்,

"மனம் சாந்தியும், சமாதானமும் அடையட்டும்"னு சொல்லிகிட்டேயிருப்பார்.

அவரைப் போய் பார்க்கலாம்னு நினைச்சி அவர் வீட்டை தேடிப் போனேன். வீடு பூட்டியிருந்துச்சி.

பக்கத்து வீட்டுல போய் கேட்டேன்,

"ஏங்க ... இங்க "மனம் சாந்தியும், சமாதானமும் அடையட்டும்"னு சொல்லிகிட்டு இருப்பாரே ... அவர் இல்லையா?"

"ஓ ... அவரா? இங்கே இல்லைப்பா"

"ஏன்?"

"ஒரு நாள் "சாந்தி"யை அடைஞ்சிட்டார்"

"அய்யய்யோ ... அப்புறம் என்னாச்சி?" பதறினேன் நான்.

"அப்புறம் என்ன ... இப்போ சமாதானத்துக்காக அலைஞ்சிகிட்டிருக்கார்"

Source : # ரிலாக்ஸ் ப்ளீஸ்

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.