Thursday, July 4, 2013

பூமியின் முதல் ஆண்-பெண்

ஒரு நாள் ஒரு பள்ளியைப் பார்வையிட ஆய்வாளர் வந்தார்.ஒரு சிறுவனைப் பார்த்து,''பூமியின் முதல் ஆண்மகன்,முதல் பெண்மணி யார்?''என்று கேட்டார்.
'ஆதாமும் ஏவாளும் என்றான் பையன்.

ஆய்வாளருக்கு மகிழ்ச்சி.''அவர்கள் இருவரும் எந்த நாட்டுக்காரர்கள்?''என்று மீண்டும் அவனையே கேட்டார்.

'இந்தியர்கள்'என்றான் பையன்.

ஆய்வாளர் சற்றே குழப்பத்துடன்,''எவ்வாறு அவர்கள் இந்தியர்கள் ஆனார்கள்?''என்று கேட்டார்.

'அது எளிது.தலைக்கு மேல் ஒரு கூரை இல்லை.உடுப்பதற்கு உடைகளும் இல்லை.உண்பதற்கோ இருவருக்கும் சேர்ந்து ஒரே ஒரு ஆப்பிள்.அப்படி இருந்தும் அதை சொர்க்கம் என்று நம்பினார்களே!அதனால் அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும்.'என்றான் பையன்.

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.