Tuesday, June 19, 2012

சுற்றுச்சூழல் தினம் - நம் உறுதி மொழி

நன்றி : நற்றமிழன் பழனிசாமி

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று பின்வரும் உறுதி மொழிகளை நாம் ஏற்போம்...

1) ஆற்றிலுள்ள மணலை முழுவதும் சுரண்டி அடுத்த மாநிலங்களுக்கு விற்போம்.... பாட்டிலில் நீர் வாங்கி குடிப்போம்...

2) வறண்ட ஏரிகளின் நடுவே வீடுகட்டி "ஏரி வீடு" என்ற பெயரிட்டு இயற்கையான வாழ்க்கையை வாழ்வோம்...

3) அணு உலை மின்சாரம் தான் வேண்டும் என்று அடம்பிடிப்போம்...(மக்கள் எதிர்த்தால் அவர்களை கொல்வோம்)

4) தேனி வனப்பகுதியில் வர இருக்கும் நீயூட்ரினோ ஆய்வுக்கூடத்தை எதிர்ப்பவர்களை அறிவியலுக்கும், "அணு தளபதி" அப்துல்கலாமிற்கும் எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்துவோம்...

5) இராசான‌ உர‌ங்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி ம‌க‌சூலை சுருக்குவோம்...

6) பெப்சி, கோக் போன்ற பூச்சிகொல்லிகளை பருகி தேச பக்தி பெருக்குவோம்...

7)விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்போம்...

8)தினமும் பிளாஸ்டிக் பைகளையே பயன்படுத்துவோம்....

9) ஓடுகின்ற கொஞ்ச நஞ்ச ஆறுகளிலும் சாயக்கழிவு, தொழிற்சாலை கழிவு, நகரக்கழிவுகளை கலப்போம்......

10) உலகம் குப்பை என்று ஒதுக்கிய எல்லா நிறுவனங்களையும், எல்லா விதிமுறைகளையும் மீறி நம்மண்ணில் இடம் கொடுப்போம்...

11) உலக நாடுகளெங்கும் உள்ள குப்பைகளை வாங்கி நம் மண் முழுவதும் பரப்பி நாமும் வல்லரசாகுவோம்.....

தொட‌ரும்....

No comments:

Post a Comment

Your feedback's/comments are welcome. Will be posted after moderation.